தமிழ்
Sorah Abasa ( He frowned )

Verses Number 42

عَبَسَ وَتَوَلَّىSorah Abasa ( He frowned ) Verse Number 1
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
أَن جَاءَهُ الأَعْمَىSorah Abasa ( He frowned ) Verse Number 2
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىSorah Abasa ( He frowned ) Verse Number 3
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىSorah Abasa ( He frowned ) Verse Number 4
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
أَمَّا مَنِ اسْتَغْنَىSorah Abasa ( He frowned ) Verse Number 5
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
فَأَنتَ لَهُ تَصَدَّىSorah Abasa ( He frowned ) Verse Number 6
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
وَمَا عَلَيْكَ أَلاَّ يَزَّكَّىSorah Abasa ( He frowned ) Verse Number 7
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىSorah Abasa ( He frowned ) Verse Number 8
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
وَهُوَ يَخْشَىSorah Abasa ( He frowned ) Verse Number 9
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
فَأَنتَ عَنْهُ تَلَهَّىSorah Abasa ( He frowned ) Verse Number 10
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
كَلاَّ إِنَّهَا تَذْكِرَةٌSorah Abasa ( He frowned ) Verse Number 11
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
فَمَن شَاء ذَكَرَهُSorah Abasa ( He frowned ) Verse Number 12
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
فِي صُحُفٍ مُّكَرَّمَةٍSorah Abasa ( He frowned ) Verse Number 13
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍSorah Abasa ( He frowned ) Verse Number 14
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
بِأَيْدِي سَفَرَةٍSorah Abasa ( He frowned ) Verse Number 15
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
كِرَامٍ بَرَرَةٍSorah Abasa ( He frowned ) Verse Number 16
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
قُتِلَ الإِنسَانُ مَا أَكْفَرَهُSorah Abasa ( He frowned ) Verse Number 17
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُSorah Abasa ( He frowned ) Verse Number 18
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُSorah Abasa ( He frowned ) Verse Number 19
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُSorah Abasa ( He frowned ) Verse Number 20
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُSorah Abasa ( He frowned ) Verse Number 21
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
ثُمَّ إِذَا شَاء أَنشَرَهُSorah Abasa ( He frowned ) Verse Number 22
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
كَلاَّ لَمَّا يَقْضِ مَا أَمَرَهُSorah Abasa ( He frowned ) Verse Number 23
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
فَلْيَنظُرِ الإِنسَانُ إِلَى طَعَامِهِSorah Abasa ( He frowned ) Verse Number 24
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
أَنَّا صَبَبْنَا الْمَاء صَبًّاSorah Abasa ( He frowned ) Verse Number 25
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
ثُمَّ شَقَقْنَا الأَرْضَ شَقًّاSorah Abasa ( He frowned ) Verse Number 26
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
فَأَنبَتْنَا فِيهَا حَبًّاSorah Abasa ( He frowned ) Verse Number 27
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
وَعِنَبًا وَقَضْبًاSorah Abasa ( He frowned ) Verse Number 28
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
وَزَيْتُونًا وَنَخْلاSorah Abasa ( He frowned ) Verse Number 29
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
وَحَدَائِقَ غُلْبًاSorah Abasa ( He frowned ) Verse Number 30
அடர்ந்த தோட்டங்களையும்,
وَفَاكِهَةً وَأَبًّاSorah Abasa ( He frowned ) Verse Number 31
பழங்களையும், தீவனங்களையும்-
مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْSorah Abasa ( He frowned ) Verse Number 32
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُSorah Abasa ( He frowned ) Verse Number 33
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِSorah Abasa ( He frowned ) Verse Number 34
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
وَأُمِّهِ وَأَبِيهِSorah Abasa ( He frowned ) Verse Number 35
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
وَصَاحِبَتِهِ وَبَنِيهِSorah Abasa ( He frowned ) Verse Number 36
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِSorah Abasa ( He frowned ) Verse Number 37
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌSorah Abasa ( He frowned ) Verse Number 38
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌSorah Abasa ( He frowned ) Verse Number 39
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌSorah Abasa ( He frowned ) Verse Number 40
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
تَرْهَقُهَا قَتَرَةٌSorah Abasa ( He frowned ) Verse Number 41
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
أُوْلَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُSorah Abasa ( He frowned ) Verse Number 42
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.