தமிழ்
Sorah Al-Waqi'ah ( The Event )

Verses Number 96

إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 1
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 2
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
خَافِضَةٌ رَّافِعَةٌSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 3
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
إِذَا رُجَّتِ الأَرْضُ رَجًّاSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 4
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّاSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 5
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّاSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 6
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
وَكُنتُمْ أَزْوَاجًا ثَلاثَةًSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 7
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 8
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 9
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
وَالسَّابِقُونَ السَّابِقُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 10
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
أُوْلَئِكَ الْمُقَرَّبُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 11
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
فِي جَنَّاتِ النَّعِيمِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 12
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
ثُلَّةٌ مِّنَ الأَوَّلِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 13
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
وَقَلِيلٌ مِّنَ الآخِرِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 14
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
عَلَى سُرُرٍ مَّوْضُونَةٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 15
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 16
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 17
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 18
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
لا يُصَدَّعُونَ عَنْهَا وَلا يُنزِفُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 19
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 20
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 21
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
وَحُورٌ عِينٌSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 22
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 23
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
جَزَاء بِمَا كَانُوا يَعْمَلُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 24
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
لا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلا تَأْثِيمًاSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 25
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
إِلاَّ قِيلا سَلامًا سَلامًاSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 26
'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 27
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
فِي سِدْرٍ مَّخْضُودٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 28
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:
وَطَلْحٍ مَّنضُودٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 29
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
وَظِلٍّ مَّمْدُودٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 30
இன்னும், நீண்ட நிழலிலும்,
وَمَاء مَّسْكُوبٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 31
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
وَفَاكِهَةٍ كَثِيرَةٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 32
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
لّا مَقْطُوعَةٍ وَلا مَمْنُوعَةٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 33
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
وَفُرُشٍ مَّرْفُوعَةٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 34
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 35
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًاSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 36
அப்பெண்களைக் கன்னிகளாகவும்,
عُرُبًا أَتْرَابًاSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 37
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
لِّأَصْحَابِ الْيَمِينِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 38
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
ثُلَّةٌ مِّنَ الأَوَّلِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 39
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
وَثُلَّةٌ مِّنَ الآخِرِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 40
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 41
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
فِي سَمُومٍ وَحَمِيمٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 42
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
وَظِلٍّ مِّن يَحْمُومٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 43
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
لّا بَارِدٍ وَلا كَرِيمٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 44
(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُتْرَفِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 45
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 46
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 47
மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
أَوَ آبَاؤُنَا الأَوَّلُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 48
"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)
قُلْ إِنَّ الأَوَّلِينَ وَالآخِرِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 49
(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 50
"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 51
அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 52
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 53
ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 54
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 55
"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."
هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 56
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلا تُصَدِّقُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 57
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 58
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 59
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 60
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
عَلَى أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لا تَعْلَمُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 61
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الأُولَى فَلَوْلا تَذَكَّرُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 62
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 63
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 64
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
لَوْ نَشَاء لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 65
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
إِنَّا لَمُغْرَمُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 66
"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
بَلْ نَحْنُ مَحْرُومُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 67
"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
أَفَرَأَيْتُمُ الْمَاء الَّذِي تَشْرَبُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 68
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 69
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
لَوْ نَشَاء جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلا تَشْكُرُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 70
நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 71
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِؤُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 72
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 73
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 74
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
فَلا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 75
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 76
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 77
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
فِي كِتَابٍ مَّكْنُونٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 78
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
لّا يَمَسُّهُ إِلاَّ الْمُطَهَّرُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 79
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 80
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
أَفَبِهَذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 81
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 82
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
فَلَوْلا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 83
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 84
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَكِن لّا تُبْصِرُونَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 85
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
فَلَوْلا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 86
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 87
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 88
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّةُ نَعِيمٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 89
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
وَأَمَّا إِن كَانَ مِنَ أَصْحَابِ الْيَمِينِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 90
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
فَسَلامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 91
"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).
وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 92
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 93
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
وَتَصْلِيَةُ جَحِيمٍSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 94
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 95
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِSorah Al-Waqi'ah ( The Event ) Verse Number 96
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.